பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் எழுத்துகளும் உரைகளும் தமிழ்நாட்டின் அறியாமை இருளகற்றி அறிவொளி பரப்பிய கருத்துக் களஞ்சியங்களாகும். மின் நூலகத்தில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் கருத்துகளைத் தாங்கிய எண்ணற்ற நூல்களும் இதழ்களும் பதிவேற்றம் பெற்றுள்ளன. அத்துடன் பெரியார் குறித்து எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் முதலியோர் எழுதிய நூல்களும் இங்கே பதிவேற்றப்பெற்றுள்ளன. அவை அனைத்தையும் ஓரிடத்தில் தொகுத்தளித்தால் பெரியார் குறித்து வாசிப்போருக்கும் ஆய்வுப் பணியில் ஈடுபடுவோருக்கும் பயன்படும் என்னும் நோக்கத்தில் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.